search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி உடல்நலம்"

    காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



    மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என நேரில் வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். தொண்டர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், பிறவி போராளியான கருணாநிதியின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.

    ‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்’ என்றும் பினராயி விஜயன் கூறினார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்து, காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி (வயது 94) வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தவண்ணம் உள்ளனர்.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று ராகுல் காந்தி பார்க்க உள்ளதாகவும், பின்னர் அவரது உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் ராகுல்காந்தி கேட்டறிவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    கருணாநிதி உடல்நலம் பெற தி.மு.க.வினர் வழிபாடு செய்வதை குறை சொல்லக்கூடாது என்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார். #masubramanian #karunanidhi #dmkworship

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் கருணாநிதி. எனவே வழிபாடுகள் நடத்துவதை சிலர் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

    இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கலைஞர் 95 ஆண்டுகளாக பகுத்தறிவு வாதியாகவே வாழ்ந்து வருகிறார். பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்பதில் உறுதியாக இருந்து தனது கொள்கைகளில் எந்த மாறுபாடும் இல்லாமலேயே இன்றளவும் வாழ்கிறார்.

    அவர் விரும்பமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு கலைஞர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.


    அந்த நம்பிக்கையின் காரணமாக கலைஞர் உடல்நலம் பெற வேண்டி அவர்கள் நம்பிக்கையின்படி வழிபாடு நடத்துகிறார்கள். அதை குறை சொல்லவும் கூடாது. தடுக்கவும் கூடாது. அது அவர்கள் விருப்பம்.

    சாதி, மதம், இனம், அரசியல் என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து கலைஞர் வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எல்லோரும் வேண்டுவது எந்த தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். #masubramanian #karunanidhi #dmkworship

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று நேரில் பார்த்து, அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். #KarunanidhiHealth #EdappadiPalaniswamy #OPS
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    அவ்வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று நேரில் பார்த்தார். பின்னர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர்.

    பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு நேரில் சென்று பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

    நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மருத்துவனையில் இருந்து வெளியேறினர். இதனால் காவேரி மருத்துவமனை அருகில் குவிந்திருந்த தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiHealth #EdappadiPalaniswamy #OPS
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். #KarunanidhiUnwell #KauveryHospital #CongressLeaders
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் உடல்நலம் பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் பிராத்தனை செய்வதாக கூறியுள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.



    இதேபோல்,  ஆடிட்டர் குருமூர்த்தியும் மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #CongressLeaders

    ×